பாலைவனத்துச் சூரியத் தனிமை
இங்கு ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே
மற்றைச்சிறகின் மீதான நிழல்
விருட்சங்கள்
வெளியேறிய வனம் இது
நிரம்பிச்
சரியும் பாலைநிலத்துகள்கள் எல்லாம்
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களாகவும்
கடற்குதிரைக் கூட்டமாகவும்
பார்வைக் குடுவையில் வழியும்
கரையே கடலாகவும்
கடலே உடலாகவும்
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து
தன் உறுபசி ஆற்றும் அமுதம்
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்று தேடியலைகிறது
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி
அந்த பாலைவனத்து பட்டாம்பூச்சி
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.