பழுப்பு
நிற புழுக்கள்
புசித்து மிஞ்சிய சடலத்திலிருந்து
மிக மெல்லிய இசை துளிர்க்கிறது
அவை மழைத்துளிகள்
ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிக சன்னமான இசையை ஒத்திருக்கிறது
எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்
காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகி
சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகி
அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில்
ஏக்கம்
பெருகி
நீலக்கடலுக்கும் நீளும்கரைகளுக்குமிடையான
மாரடிப்பில் மரித்துப் போகிறது
இவ்வாறாக எனதிசையின் மரணம்
இனிதே
நிகழ்கிறது....
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.