நான்குவழிச்சாலை
நெடுகிலும்
நள்ளிரவில் மினுக்கும்
பூனையின் கண்கள்
வேவு பார்ப்பது யாரையெல்லாம் ?
விரையும் வாகனங்களின்
நகப்பூச்சுகளில் சொட்டுவது
யாருடைய மரணத்தின் மிச்சம் ?
மழையெச்சில் வழிய தொங்கும்
மரத்தின் நாக்குகள் காத்திருப்பது
எதை விழுங்க ?
இருத்தல் குறித்த
யாதொரு அசைவுமற்று கனக்கும்
இந்த வாழ்க்கையை
யாரிடம் கைமாற்ற ?
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.