Sunday, June 14, 2009

சின்னஞ் சிறுகதை

சங்கர் Weds ஷாலினி.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர்.

மேடையில் ஜோடியாக நிற்க வைத்து பெரியவர்கள் ஆசீர்வதித்து நண்பர்கள் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மங்கல மெட்டி அணிந்தாள்.

மேள தாளம் முழங்க, மந்திரம் ஓதப்பட சுபயோக வேளையில் தாலி கழுத்தில் ஏறியது.

ஷாலினி குமாரின் நினைவோடு, ஐந்து நிமிடம் தாமதமாக படபடப்புடன் பட்டுப் புடவையில் வந்திறங்கினாள்.

"அடக் கடவுளே ! என்ன நடக்குது இங்க ?", குழப்பத்தில் குமார்.

கற்பனைக் கதையை கஷ்டப்பட்டு படிச்சிட்டீங்களா ? பள்ளிக்கூடத்துல படிக்கும் போதெல்லாம் நல்லா தாங்க இருந்தேன். ஒழுக்கமா எல்லா நோட்டு புக்கும் எடுத்துட்டு போவேன். இந்த காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் தான் றெக்கை மொளைச்சிடுச்சு(சில பேரு வாலுன்னு சொல்லுவாங்க கண்டுக்காதீங்க). புக்கு நமக்கு எதுக்கு. கையில பை எடுத்துட்டு போனா கெத்து கொறஞ்சிடும்ல. நோக்கம் போல ஏதாச்சும் ரெண்டு நோட்டு எடுத்துட்டு போறது, எந்த பாடத்துக்கு எந்த நோட்டுனு பாக்குறதில்ல. அப்போ ஆரம்பிச்சது இந்த கெட்ட பழக்கம். என்னடா இவன் கதைங்கற பேர்ல என்னத்தயோ எழுதி வச்சிட்டு பத்தாக்கொறைக்கு என்னமோ உளரிட்டு இருக்கானேன்னு பாக்றீங்களா ? அந்த கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு பாடத்த நோட்டுல முன்னாடி இருந்து எழுதுறது. இன்னொரு பாடத்த நோட்டு கடைசி பக்கத்துல இருந்து பின்னாடி எழுதுறது. அந்த ஞாபகத்துல கதையும் பின்னாடி கடைசி வரில இருந்து எழுதிட்டேன். கோச்சுக்காம கடைசி வரில இருந்து மேல்நோக்கி மறுபடியும் படிங்க.

பி.கு: அதுக்கு அப்புறமும் கதை கருமமா இருக்குன்னு காறித் துப்புறவங்க தயவுசெய்து மானிடரை அசுத்தப்படுத்த வேண்டாம், ரெஸ்ட் ரூமை பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.