நாட்டுப்புற பாட்டுக்குத்தான்
எசப்பாட்டு நான் பாட
அறுத்துவச்ச நெல்லுக்கட்டும்
ஆடியாடி சிரிக்குதடி
எசபாட்டு:
வெட்டுக்கத்தி தூக்கிக்கிட்டு
புல்லறுக்கப் போறவநீ - என்
வெத்துடம்பில் வச்ச கண்ணு
சூடம் சுத்தியும் போகலயே...
எருது ஒண்ணு முன்னே போக
ஏரு ஒண்ணு பின்னே வர
எம்மனசு உன்வீட்டு
வாசவிட்டு கடக்கலையே...
வயக்காட்டு வேலையிலும்
வண்டிமாடு சொல்லுதடி
வாசமான உன்மனசின்
ஆழமான ஆசையத்தான்....
நீ பொறந்த வேளையிலே
அப்பத்தா கிட்ட வந்து
உனக்காக பொறந்தவடா
உசிராக வச்சிக்கன்னா...
நொந்து போன மனசுக்கு - உன்
நெனப்பேதான் கசாயம்
நோகாம உன்னயுந்தான்
நான் வாழவைப்பேனே....
காணாத என்நெஞ்ச
காட்டுக்குள்ள தேடுனனே...
கள்ளச்சிறுக்கி கண்ணுக்குள்ள
மாட்டிக்கிட்டு முழிக்கிறனே...
குத்தவச்ச நாள் மொதலா
குறிச்சேதான் வச்சிருந்தேன்
ஆடிமாசம் கழியட்டுமே
ஆவணில கட்டிக்கலாம்.
பி.கு:
படிச்சுப்புட்டு போறவுக
போகுமுன்ன கீழஉங்க
கருத்துகள தட்டிவிட்டு
போனாலும் தப்பில்ல...
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.