Friday, January 29, 2010
உயிரின் உருவம் - கவிதை
சீறும் எரிமலையாகவும்
சுழன்றடிக்கும் புயல்மழையாகவும்
பிரயத்தனப்படும் பிரளயத்தில்
சிக்கிய தேகம்
பிரபஞ்சத்தின் ஒரு உச்ச கணத்தில்
மேலே எழும்பி
உயிர் அதனிடத்தும் பிரிந்துலவி
பின்பு இரண்டும் மீண்டும் கலந்தது
சுற்றிய சூழ்கொடி இன்னமும்
அறுக்கப்படாமல் கிடக்கிறது
என் பிண்டத்திலிருந்து பிரிந்த
ஒரு துண்டம்
என் சிசுவாகிய நீயும்
ஒரு சிறிய அளவு அண்டம் !
உன்னைத் தொட்டு தூக்குகிறேன்
முதன் முறை
என் தீண்டலின் உணர்ச்சியில்
உனக்குள் ஒரு அதிர்ச்சி
அதைத் தொடர்ந்து சிறு சிணுங்கல்
நீ அழுவதற்காக
முயற்சி செய்கிறாய்
நான் அழுதே விட்டேன் !
கால்களுக்கிடையில் இன்னும்
மரண வலி
எனையாள வந்த உனக்கோ
அது பிறப்பின் வழி
முகங்காண முடியாவிட்டாலும்
எங்கோ பார்த்துச் சிரிக்கிறாய்
இதழ்குவியும் புன்முறுவலும்
முகங்கோணும் அழுகையும்
மொழியாக நிறைந்த உன்னுலகத்தில்
சத்தங்கள் மட்டுமே
சங்கேதக் குறிப்புகள்
கூரைக்கு வெளியே
வெடித்துச் சிதறும்
கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும்
எதிராக ஒலிக்கப் போகும்
உன் உரிமைக் குரலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது
நீ என் உயிரின் உருவம்
ஈனநிலைமாற்ற வந்த
விதியின் வடிவம்!
-
அவனி அரவிந்தன்
வெளியிட்டதற்கு நன்றி கீற்று !
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1075:2009-11-02-00-21-07&catid=2:poems&Itemid=88
Friday, January 22, 2010
ஆலமரமும் அவரைக்கொடியும் - 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக
அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். எட்டு மணி வண்டியில் சாளரத்துக் குளிர்க் காற்றை ஆழமாக சுவாசித்தவாறு பயணப்பட்டாள். எழுந்ததில் இருந்து ஓடியாடி, கிடந்த வேலைகளை எல்லாம் அரையும் குறையுமாய் முடித்துவிட்டு எட்டு மணி வண்டியை ஒருவழியாகப் பிடித்து விட்டாள். குறிப்பாக அந்த வண்டியில அவளுக்கு கண்மூடித்தனமான ஈடுபாடு. எமனே வந்து அழைத்தாலும் எட்டு மணி வண்டியில் தான் வருவேன் என்று பாசக்கயிற்றைப் பிடித்தபடி முரண்டு பிடிப்பாள். கொஞ்ச காலமாகத்தான் அவளுக்கு இந்த ஆவலாதி. சரியாகச் சொன்னால் மூன்று மாதத்திற்கு முன்னொரு நாள் அரசம்பட்டி விலக்கை அடுத்த ஏரிக்கரையோர ஆலமர நிழல் நிறுத்தத்தில் ஏறிய அவனைப் பார்த்ததில் இருந்து, அவளுக்கு உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு, உள்ளங்காலில் வண்டு ஊறுவதைப் போல. அவனப் பற்றி நினைத்தால் சங்கடங்கள் மறைந்து சந்தோசம் முகிழ்வதாக இருந்தது. சில சமயம் வேறு விசயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் அவசரத்தந்தியாக மணி ஒன்று அடித்து 'என்ன அவனைப் பற்றி நினைக்கவில்லையா ?' என்று கேட்கிறது. சரியா தவறா என்று தராசு நிறுத்திப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு அது பிடித்திருந்தது. வீட்டில் மட்டும் தெரிந்தால் அழிவுகள் அத்தனையும் அவளைச் சுற்றி அரக்கத்தனத்துடன் அரங்கேற்றப்படும்.
இளம்பச்சை நிறத்தில் அரும்பு விட்டிருந்த அவரைக் கொடியொன்று பந்தலில் படராமல் அதன் போக்குக்குக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதையொட்டி வளர்ந்திருந்த ஆலமரம் அந்த அவரைக் கொடியைச் சுற்றிக் கொள்ள ஆளாய்ப் பறந்தது. மண்ணோடு கலந்திருந்த தன் வேரைப் பிடுங்கிப் பிரிய வேண்டி கிளைகளை வேகமாக அசைத்துப் பார்த்தது. மார்கழி மாத வாடைக் காற்று இதையெல்லாம், உரசியபடியே ரகசியமாக நோட்டம் விட்டுச் செல்கிறது.
இரவு முழுக்க நிலவில் குளித்த தெருக்களை, அதிகாலைச் சூரியன் மஞ்சள் பூசி அழகுபடுத்திக் கொண்டிருந்தது. அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா இன்று சரிபார்த்துக் கொண்டாள். வாடாமல்லி வண்ணத்தில் சுங்குடிச் சேலையும், நாரையின் இறகு நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கோட்டுச் சித்திரம் போலக் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
சாளரத்தின் வழியே தெரியும் காட்சிகள் அவளுக்கு தொலைக்காட்சியைப் போல தோன்றியது. அரிதாரம் பூசிய வயல்களையும், வானத்தையும் மேகத்தையும் அதைத் தொடும் மலைமுகடுகளையும் பிரதியெடுத்துச் சிரிக்கும் நீர்நிலைகளையும் அந்த சாளரத்தின் வழியாக ரசித்துக் கொண்டே வந்தாள். தலையை லேசாக வலித்தது. காட்சிகளும் சற்று மங்கியும் தெளிந்தும் தெரிந்தன. காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிட்டிருக்கக் கூடாது தான். அரசம்பட்டி நிறுத்தத்தை அவளது மனம் எதிர்நோக்கியிருந்தது. அவன் நினைவே அவள் உடல், மனம் முழுதும் வியாபித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஏன் ? எதற்கு இப்படி ? இருபத்தியோரு வருட வாழ்க்கையை கணம் கணமாக அசைபோட்டுக் கொண்டே வந்தாள். அலசிப் பார்த்தால் இது வரை அவளின் ஆசைப்படி எதுவும் செய்ததில்லை; செய்ய விடப்பட்டதும் இல்லை. அவளுக்கு பிடித்தமானதை மற்றவர்களே நிர்ணயித்திருக்கிறார்கள். காற்றின் வீச்சுபலத்தின் பக்கமெல்லாம் செல்லும் பாய்மரப் படகாகவே இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறாள். அவன் நினைப்பு இவளுக்கு கரையை காட்டுவதாக தோன்றியது. தற்சமயம் வேலைக்குச் செல்வதைத் தான் பெரும் போராட்டத்துக்குப் பிறகு செய்திருக்கிறாள். முன்னர் அவள் வேலைகளை மிகவும் சிரத்தையாகவும் பொறுப்பாகவும் முடிப்பவளாக இருந்திருக்கிறாள். இப்பொழுதெல்லாம் அசமந்தமாக இருப்பதே பிடித்திருக்கிறது. மனது மதமதப்பாகவே இருக்கிறது எல்லா நேரமும். பயணத்தின் ஒரு திருப்பத்தில் சரிந்த கைப்பையை அள்ளியெடுத்து மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
ஒரு தேநீர் விடுதியை ஒட்டி வண்டி நின்றது. அந்த விடுதிக்கு வீடும் கடையும் சேர்ந்தாற்போல ஒரு அமைப்பு. நூறு வருடம் வாழ்ந்த வீடாகத் தோன்றியது. விசாலமான திண்ணையைக் கடையாக்கியிருந்தார்கள். கடையை ஒட்டிய வாசலை சிறுபெண்ணொருத்தி பெருக்கிக் கொண்டிருந்தாள். மேல்த்துணி எதுவும் போடாமல் அரையில் ஊதாவண்ணத்தில் பூப்போட்ட பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். அதில் அழகான விசயமே அவள் பெருக்கும் பாணி தான். ஆறு வயதுதான் இருக்கும். குப்பை பெருக்குவதைக் கூட அவ்வளவு நேர்த்தியாக ஒரு ஓவியம் வரைவதைப் போல அழகியல் நுட்பத்துடன் செய்து கொண்டிருந்தாள். வண்டி நகர்ந்துவிட்டது. அந்தச் சிறுபெண்ணுடன் அவள் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். அந்தச் சிறுபெண் பதினைந்து வருடம் கழித்தும் இதே போல நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் வேலைகளை செய்வாளா ? இல்லை தன்னைப் போலவே அவளும் மாறிவிடுவாளா ? கேள்விகள் வழியில் கடந்துசெல்லும் புளிய மரக் கொப்புகளில் தொங்கிக் கொண்டிருந்ததன. அந்தக் கேள்விகள் காற்றில் உதிர்ந்து அதன் கீழ் செல்வோரின் உச்சி வழியாக உள்ளங்களில் இறங்கி குழப்பங்கள் உண்டு பண்ணுவதாக தனக்குத் தானே கற்பித்துக் கொண்டாள். மடக்குக் கண்ணாடியை எடுத்து ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கண்களின் இருமருங்கிலும் ரத்தச்சிவப்பில் வேர்விட்டோடியிருந்தது. அது ஒரு சிகப்பு ரோஜாச்செடியின் வேர். அதில் பூக்கும் ரோஜா மலரானது தூக்கத்தை உறிஞ்சிக் கொண்டு மாறாக இனிய மாயக் கனவுகளைக் கொண்டு தரும் வல்லமை வாய்ந்தது.
*******
அவள் ஆவலாதியுடன் எதிர்பார்த்த அரசம்பட்டிக்காரன் வந்தே விட்டான். வசீகரப் புன்னகையை வீசிக்கொண்டே அவளைப் பார்க்கிறான். அய்யனார் குதிரையில் இருந்து இறங்கி, அந்த எட்டு மணி வண்டியில் அவன் உருவில் வருவதாக அவள் மனதுக்குள் புனைந்து கொண்டாள். இவளுக்கு பிந்திய இடத்தில் சாளரத்தின் ஓரமே அவனும் அமர்கிறான். அவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த மதமதப்பும், அமைதியும் சிதறியோடிவிட்டன. பயணத்தின் பாதையில் இருக்கும் மேடுபள்ளங்களில் விரைவாக இறங்கியும் ஏறியும் அலைக்கழிந்தது அவள் மனது. அவள் தனது சிகையைச் சரிசெய்து கொண்டாள். பின்னிலிருந்து அவன் பார்வைக்கு பாவை போலத் தோன்ற வேண்டுமென எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஏதோ தடுத்தது. இப்படியெல்லாம் நடந்துகொள்வது தவறு என்று ஒரு குரல் அதி ஆழத்திலிருந்து மிகவும் சன்னமாக சக்தியற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் குனிந்து தன் கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியை எடுக்கப் போனாள். அவன் அவளது வலது காது மடலுக்குப் பின்பகுதியிடுக்கில் லேசாக ஊதினான். குளிர்ந்த அந்தக் காற்று அவளுடைய ரோமக்கால்களை சிலிர்ப்படையச் செய்தது. தன்னிலை மறந்தவளாக அவள் அவனுடன் அந்த பச்சை வெளிகளில் இறங்கி உலவ ஆரம்பித்தாள். ஏரிக்கரை ஆலமர விழுதுகளில் தூளிகட்டி அவள் ஆட, அவன் ஆட்டிவிட்டுக் கொண்டிருந்தான். மணம் கமழும் அதே மயக்கும் புன்னைகையை உதிர்த்தவாறே அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு அது போதை தருவதாக இருந்தது.
தூளியில் ஆடியபடியே அவனுடைய சிகையமைப்பைப் பார்த்தாள். அந்த ஆலமரத்தின் உச்சிக் கிளையில் இருக்கும் கரிச்சான் குருவிக் கூடு போலவே அவன் தலைமுடி அமைப்பு தெரிந்தது.
"என்னத்த மேல இருந்து அப்பிடி பாக்குற ?", அவன் குறுகுறுப்புடன் கேட்டான்.
கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள் பின், "ஒங்க தலயப்பார்த்தா குருவிக்கூடாட்டமே இருக்கே, என்ன கரிச்சாங்குருவிக்கு வாடகைக்கு விட்டீகளாக்கும் ? மாசம் பொறந்தா குருவிக எம்புட்டு கொடக்கூலி தருதுக ? ", என்று குறும்பு தளும்பிவழியும் வகையில் பதில் கேள்வி கேட்டாள்.
"அதுவா ? ஆமாம்புள்ள எனக்கென்ன தோப்பா ? தொரவா ? இல்ல ஆயிரம் ஏக்கரு நெல்லுக்காடா ? எதுவுந்தான் இல்லையே. அதான் தலமயிரு சும்மாத்தான இருக்குன்னு கொடக்கூலிக்கு விட்டுட்டேன். குருவிக ரெண்டும் மாசம் பொறந்தவடம் சரியா தொண்ணுத்தெட்டு லவாப் பழம் குடுக்குதுக. அதுல ஒண்ணு ஒண்ணையும் பாதிக் கடிச்சி ஒனக்குத் தாரேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவ ?", அவளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் கேட்டான்.
"பதிலுக்கு என்ன பானை பானையா பொன்னும் நகையும் குடுப்பாகளாக்கும். ஒண்ணுவிடாம எல்லா பழத்தையும் தின்னுட்டு கொட்டைய வேணா தாரேன்", கேட்ட வினாடியில் பதில் சொன்னாள். சொல்லிவிட்டு இளக்காரமாகப் பார்த்தாள். அவன் அவளை அடிக்க குச்சி தேடி ஓட அவள் தூளியில் இருந்து குதித்து தோட்டத்துப் பக்கம் ஓடினாள். நொச்சிக் கம்பைத் தூக்கிப் பிடித்தபடி அவளைத் துரத்திக் கொண்டு அவனும் ஓடினான். ஓடும் வழியில் துக்கம், சோகம், அடக்குமுறை எல்லாவற்றையும் அவள் கால்களில் மிதித்துக் கொண்டே சென்றாள். இருவரும் அவரைக் கொடிப் பந்தலின் கீழ் இளைப்பாறினார்கள். முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
சிறிது நேரங்கழித்து உடையில் ஒட்டிய காய்ந்த சிறுபுற்களையும் மண்தூசியையும் தட்டியவாறு எழுந்து வரப்போரம் காலாற நடந்தனர். அவனது வலதுகை விரல்களும் அவளது இடதுகை விரல்களும் மட்டுமே லேசாக உரசின. ஒவ்வொரு உரசலிலும் நுனிநாக்கின் புளிப்பாக அவள் சிலிர்த்துக் கொண்டே நடந்தாள். அவர்கள் ஒரு விவசாயக் கிணற்றை ஒட்டி நின்றனர். அவன் குதித்துக் குளிக்கப் போவதாகச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அந்தக் கிணற்றையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். சதுரமான பெரிய கேணியது. ஏற்றம் கட்டி இறைத்த சுவடு இன்னும் அழியாமல் இருந்தது. தற்பொழுது மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும் அறிய முடிந்தது. பெரிய இரும்புக் குழாய் ஒன்று பச்சைத் தண்ணீருக்கு அடியில் பயமில்லாமல் இறங்கி நின்றது. கிணற்றின் ஓரங்களில் தென்னை மட்டையும் குப்பைக் காகிதங்களும் நீரில் மேலும் கீழும் ஆடியபடி மிதந்து கொண்டிருந்தன. அவளுக்கு நீச்சல் தெரியுமா என்று அவன் கேட்டான். தெரியாது என்று சொல்ல அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் தெரியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய உச்சிப் பொட்டு கலைந்திருக்கிறது என்று அவன் சொன்னான். ஓடிவந்ததில் வேர்வைக்குக் கலைந்திருக்கும் என்று சொன்னாள். திடீரென்று உச்சந்தலையில் ஊசி இறங்குவதைப் போல உணர்ந்த அவள், தனது கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். அந்தச் சமயம் பார்த்து அவன் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டான். "ஐயோ மாமா....", என்று அலறியபடி அவள் அந்தப் பச்சைத் திரவத்தில் கற்சிலை போல விழுந்து முங்கினாள். கிணறு அவளை மிகுந்த மனவிருப்பத்துடன் விழுங்கி விரைவாக உள்ளே இழுத்துக் கொண்டது. மேலே எகத்தாளமான சிரிப்புச் சத்தம் மங்கலாகக் ஒலித்தது.
அவளுடைய மாமா அவளை அதீத கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வராதே என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான். அவளுடைய அம்மா அவளை முறத்தால் அடித்து ஓய்ந்தாள். அவள் அப்பா உரலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் அவள் தலையில் போடுவதற்கு. அதற்கு மேல் அவள் மயங்கிவிட்டாள்.
*******
ஆலமரத்தடியில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அவரைக்கொடிப் பந்தல் மொத்தமாக விழுந்து கிடந்தது. எட்டு மணி வண்டி ஆலமரத்தின் நடுத்தண்டில் மோதி ஏரிக்கரையில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தது. அரிசிக்கடை சண்முகத்துக்குத் தான் தலையில் செமத்தியான அடி. மாட்டுவண்டியில் எடுத்துப் போட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். ஆண்டவன் புண்ணியத்தில் மற்றவர் யாருக்கும் பெரிய அடி இல்லை. அவள் மட்டும் படிவழியாக ஏரியில் விழுந்திருக்கிறாள். ஊர்க்காரர்கள் அவளை வெளியே எடுத்து தண்ணீரை வெளியே விட்டு முழிக்க வைத்தார்கள். அவளுக்கு நினைவு வந்தது.
"இந்த ஒத்தப் பனமரத்துக்கு மஞ்ச குங்குமம் வச்சு கும்புடணும்னு தலையாரி சொல்லிக்கிட்டே இருக்காப்ல யாரும் கேக்க மாட்றீயளேயா. இப்பப் பாரு முனியடிச்சிருச்சு. இத்தாம்பெரிய வண்டியையே கவுத்திருச்சேப்பா. ஆளுங்கக்கிட்ட வெளாடலாம், ஆண்டவன் கிட்ட வெளாடலாமா. தை பொறக்குறதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்கப்பா அம்புட்டுதேன் நாஞ்சொல்லுவேன்", ஊர்ப்பெரியவர் ஒருவர் ஏதோ கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவளுக்கு யார் பேசுவதும் கேட்கவில்லை. அவளையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
"இந்தப் புள்ளையப் பாருங்கய்யா. எப்புடி அழுவுதுன்னு. ஏத்தா மொத அழுகைய நிப்பாட்டு. ஏதோ மாரியாத்தா புண்ணியத்துல எல்லாம் உசுரு பொழச்சு நிக்கோம். இந்தாக்குல நீ மால மாலையா கண்ணுல தண்ணிவிட்டுட்டு நிக்கிற. ஒங்கண்ணீருல கண்மாயே ரொம்பி வழிஞ்சிரும் போலயே", அறிமுகமில்லாத ஒருவர் ஆதரவாக அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்.
அவளுக்கு நிதர்சனமும் விளங்கலாச்சு. மூன்று மாதத்திற்கு முன் வந்த அரசம்பட்டிக்காரன் அதற்குப் பின் அந்த வண்டியில் இதுவரை வராததும் இன்று கூட மாயவுலகத்தில் தான் அவனுடன் சஞ்சாரித்ததும் அவளுக்கு உரைத்தது. மாமன் ஏசியதும், அப்பனும் ஆத்தாளும் அடிக்க வந்ததும் எல்லாமும் மயக்கம் தானா ? எதற்காக இப்படிக் கனவுகள் ? கேள்விகளைனைத்தும் புளியமரங்களில் கொக்கி போட்டு தொங்கிக் கொண்டிருந்தன, அதன் கீழ் செல்பவர் மீது விழுவதற்கு ஏதுவாக. அவள் நனைந்திருந்த தனது கைப்பையை வேகமாகத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது. அது அவளுடைய கணவனான மாமன் திருமணத்திற்குப் பிந்திய முதல்த் தைப்பொங்கலுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தது. அவள் இன்னமும் அழுது கொண்டே நின்றிருந்தாள். அந்தக் கண்ணீரில் பெயர் தெரியாத சில சாயங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து ஓடிக் கொண்டிருந்தன.
பி.கு. இந்தக் கதை 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது.
Thursday, December 31, 2009
பழைய வீடு -- கவிதை
அவசியம் இல்லாவிடினும்
மாதம் ஒரு முறையாவது
தவறாமல் செல்கிறேன்
தேரடி வீதியில்
குடுகுடுப்பைக்காரனுக்கு
பயந்து ஓடிய
குறுக்குத் தெரு கூட
முகமறந்த நண்பனைப் போல
என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறது
மிதிவண்டியிலிருந்து
விழுந்த தடம்
ஊர்திகள் விரையும்
இந்தத் தார்ச்சாலைக்கு அடியில்
எங்கோ புதைந்து கிடக்கிறது
முழங்கைத் தழும்பை
தடவிக்கொள்கிறேன்
போகுமுன் பதியனிட்ட மாமரம்
வாசலை ஒட்டி
இருபதடிக்கு வளர்ந்திருக்கிறது
அதன் நிழலில்
யாரோ ஒருத்தி
கைக்குழந்தையுடன் நிற்கிறாள்
அந்த நிழல்
எனக்குச் சொந்தமில்லை
அளவுக்கு அதிகமாக
அரிதாரம் பூசிக்கொண்டு
ஒரு அடிகூட நகராமல்
அதே இடத்தில்
மாறுவேடம் பூண்டு நிற்கிறது
கடனுக்கு முங்கிப் போன
எங்கள் பழைய வீடு!
வெளியிட்ட சென்னை ஆன்லைனுக்கு நன்றி !
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=7f6ce5eb-00ea-4d71-83de-84e36deda464&CATEGORYNAME=kavi
Monday, December 21, 2009
வன்மழை - கவிதை
கருப்புநிறக் களிறுகளாக
கார்முகில்கள் ஒன்றுகூடி
வாரியிறைக்கும் வான்மழை
இல்லை இல்லை
இது வன்மழை !
கண்ணிவெடியும் காடையர்களும்
தின்று போட்ட மிச்சத்தை
வென்று விழுங்கும் ஆசையில்
அடாது பெய்யும் விஷத்துளிகள்
ஈரங்களற்ற மண்ணில்
ஒட்டாமல் விழுகின்றன
வியர்வையிலும் குருதியிலும்
நனைந்த துணிகளுக்கு
மழைத் தண்ணீரை
அடையாளம் தெரியவில்லை
ஆனாலும் கேள்வியில்லாமல்
நனைந்துகொண்டன.
தாரிச்சிட்டுகளை
விரட்டித் திரிந்த குட்டிகளின்
குண்டுக் காயங்களில் கலந்து
தார்ப்பாய் முகாம்களை திசைபிரித்து
சீழ்ரத்தத்துடனும் சீற்றத்துடனும்
ஓடும் மழைநீரில்
காகிதக் கப்பலொன்று
அனாதியாய் முங்கிக் கிடக்கிறது
கனமழை ஓய்ந்துவிட்டது
அங்கு கன்னங்களெல்லாம்
இன்னும் நனைந்தபடியே !
வெளியிட்டதற்கு நன்றி யூத்புல் விகடன்:
http://youthful.vikatan.com/youth/Nyouth/arvind19102009.asp
Wednesday, December 9, 2009
ஆதாம் ஏவாள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக
யாதுமற்ற வெளியில்
ஆடைகள் களைந்த
அழகின் நிர்வாணம்...
வெட்கம் பாராட்டாத ஒளி
மேனியெங்கும்
திரையாகப் படர்ந்தது...
உச்சிப் பொழுதுகளில்
பரிமாறிக்கொண்ட
மதுமோகப் பார்வைகள்
அந்திவேளைகளில்
வண்ணம் பெற்றுப்
பரவசமாகின்றன...
ஆயுள் பத்திரிக்கையின்
முதல் பக்கம்
இந்தக் காதலைக் கொண்டே
அச்சடிக்கப்பட்டிருக்கிறது...
மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்
ஒவ்வொரு இரவும்
பிழையின்றி நிகழ்கிறது
ஒரு கோடி கூடல்கள்
விழாக்கால விருப்பத்துடன்...
நிலை மறந்து
மிதந்து செல்லும்
மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்
அதிகரித்துப் போகிறது
பல கோடி ஊடல்கள்
கடுங்குளிரின் நடுக்கத்துடன்...
குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...
இந்தக் காவியத்தின்
கடைசி வரி
துரிதகதியில் கொதிக்கும்
உயிர்த்திரவம் தொட்டு
எழுதப்படுகிறது...
ஆவி நோக
அழுது தீர்த்த
ஆழிவந்து சூழ
யுகம் யுகமாய்த் தீட்டிய
ஓவியத்தின் வண்ணங்கள்
தடயமின்றிக்
கரைந்து போகிறது
காற்று மட்டுமே சாட்சியாக...
முதலைத் தொடங்கியவர்களே
முடித்தும் வைக்கிறார்கள்...
வானமே ஆதாம்
பூமியே ஏவாள்...!
ஆடைகள் களைந்த
அழகின் நிர்வாணம்...
வெட்கம் பாராட்டாத ஒளி
மேனியெங்கும்
திரையாகப் படர்ந்தது...
உச்சிப் பொழுதுகளில்
பரிமாறிக்கொண்ட
மதுமோகப் பார்வைகள்
அந்திவேளைகளில்
வண்ணம் பெற்றுப்
பரவசமாகின்றன...
ஆயுள் பத்திரிக்கையின்
முதல் பக்கம்
இந்தக் காதலைக் கொண்டே
அச்சடிக்கப்பட்டிருக்கிறது...
மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்
ஒவ்வொரு இரவும்
பிழையின்றி நிகழ்கிறது
ஒரு கோடி கூடல்கள்
விழாக்கால விருப்பத்துடன்...
நிலை மறந்து
மிதந்து செல்லும்
மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்
அதிகரித்துப் போகிறது
பல கோடி ஊடல்கள்
கடுங்குளிரின் நடுக்கத்துடன்...
குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...
இந்தக் காவியத்தின்
கடைசி வரி
துரிதகதியில் கொதிக்கும்
உயிர்த்திரவம் தொட்டு
எழுதப்படுகிறது...
ஆவி நோக
அழுது தீர்த்த
ஆழிவந்து சூழ
யுகம் யுகமாய்த் தீட்டிய
ஓவியத்தின் வண்ணங்கள்
தடயமின்றிக்
கரைந்து போகிறது
காற்று மட்டுமே சாட்சியாக...
முதலைத் தொடங்கியவர்களே
முடித்தும் வைக்கிறார்கள்...
வானமே ஆதாம்
பூமியே ஏவாள்...!
Friday, November 20, 2009
முள்ளோடு உறவாடும் பூ!
பிரிந்து விழுந்தும்
பறக்கத் துடிக்கும்
சிறகாகக் காதல்....
விழுந்த சிறகை
எடுத்து விளையாடும்
சிறுமியாக நீ....!
பாட்டி சொன்ன கதைகளில்
கேட்டு ரசித்த
பேரழகு இளவரசிகளும்
தேவலோக மங்கைகளும்
பழைய தாவணி போட்டுக்கொண்டு
பாசி மணி கோர்த்திருந்தால்
உன்னைப் போல் தானடி இருந்திருப்பார்கள்.
என் செல்லக்கிளி
நீயென்று சொல்லி
மறைத்து வைத்த மிளகாயை - உன்
சொக்க வைக்கும் உதடுகளில்
குறும்பாக நான் தேய்க்க
நீ சிரித்துக் கொண்டே சிந்தும்
கண்ணீரோடு சேர்ந்து
நம் காதலும் பெருக்கெடுக்கும்.
பிறந்தது என்னவோ
ஆட்டுக்குட்டி முட்டையிடும்
அழகிய கிராமம்.
படித்ததெல்லாம்
குயில்களும் மயில்களும்
கற்றுத் தந்த பாடம்.
அப்படியிருக்க,
"எங்கு சென்று வாங்கி வந்தாய்,
இதழ்வழிக் கல்வியில்
இளங்கலைப் பட்டம்?"
முறைத்துச் சிரித்து
பூசி மறைத்த விரிசல்களும்,
அடித்துச் செல்லும்
அலைகளையெல்லாம்
தடுத்து நிறுத்தும் கற்கள் போல
அடுக்கி வைத்த நினைவுகளும்
நாம் காதலினால் கட்டிய
அடையாள வீட்டிற்கு
அலங்காரமாக நிற்கின்றன...
மேகத்தினுள்ளே
குடியிருக்கும் மழை நீ....
மோகத்தினூடே
மறைந்திருக்கும் சிலை நீ...
இலையோடு வழிந்திருந்து
விழுகின்ற மழைத்துளி போல்
காதோடு ரகசியமாய்
கதை பேசும்
இதழிசையும் நீ...
முள்ளோடு உறவாடும்
பூவாக நீ இருந்தால்
வண்டாக நான் மாறி
விளையாட மாட்டேனா?
- அன்புடன் அரவிந்தன்.
நன்றி - சென்னை ஆன்லைன்
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=df3ca012-ddb0-466e-a941-42a5d5e76f64&CATEGORYNAME=kavi
பறக்கத் துடிக்கும்
சிறகாகக் காதல்....
விழுந்த சிறகை
எடுத்து விளையாடும்
சிறுமியாக நீ....!
பாட்டி சொன்ன கதைகளில்
கேட்டு ரசித்த
பேரழகு இளவரசிகளும்
தேவலோக மங்கைகளும்
பழைய தாவணி போட்டுக்கொண்டு
பாசி மணி கோர்த்திருந்தால்
உன்னைப் போல் தானடி இருந்திருப்பார்கள்.
என் செல்லக்கிளி
நீயென்று சொல்லி
மறைத்து வைத்த மிளகாயை - உன்
சொக்க வைக்கும் உதடுகளில்
குறும்பாக நான் தேய்க்க
நீ சிரித்துக் கொண்டே சிந்தும்
கண்ணீரோடு சேர்ந்து
நம் காதலும் பெருக்கெடுக்கும்.
பிறந்தது என்னவோ
ஆட்டுக்குட்டி முட்டையிடும்
அழகிய கிராமம்.
படித்ததெல்லாம்
குயில்களும் மயில்களும்
கற்றுத் தந்த பாடம்.
அப்படியிருக்க,
"எங்கு சென்று வாங்கி வந்தாய்,
இதழ்வழிக் கல்வியில்
இளங்கலைப் பட்டம்?"
முறைத்துச் சிரித்து
பூசி மறைத்த விரிசல்களும்,
அடித்துச் செல்லும்
அலைகளையெல்லாம்
தடுத்து நிறுத்தும் கற்கள் போல
அடுக்கி வைத்த நினைவுகளும்
நாம் காதலினால் கட்டிய
அடையாள வீட்டிற்கு
அலங்காரமாக நிற்கின்றன...
மேகத்தினுள்ளே
குடியிருக்கும் மழை நீ....
மோகத்தினூடே
மறைந்திருக்கும் சிலை நீ...
இலையோடு வழிந்திருந்து
விழுகின்ற மழைத்துளி போல்
காதோடு ரகசியமாய்
கதை பேசும்
இதழிசையும் நீ...
முள்ளோடு உறவாடும்
பூவாக நீ இருந்தால்
வண்டாக நான் மாறி
விளையாட மாட்டேனா?
- அன்புடன் அரவிந்தன்.
நன்றி - சென்னை ஆன்லைன்
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=df3ca012-ddb0-466e-a941-42a5d5e76f64&CATEGORYNAME=kavi
Wednesday, August 19, 2009
அடுத்த எம்.பி
வரிசைல நின்னு டிக்கெட் வாங்கி, வரிசைல நின்னு ரயில்ல ஏறி, வைகை எக்ஸ்பிரஸ்க்கு உள்ளாரவும் வரிசையாவே நின்னு ஒரு வழியா 300 மைல் தாண்டி மதுரை மண்ணுல கால வச்சதுகு அப்புறம் தான் மூச்சே வந்தது. நிம்மதிப் பெருமூச்சு. நாலு வருசம் படிச்சு, கிழிச்சு, ஒரு வருசம் வேலை தேடி நாயா பேயா, அலைஞ்சு திரிஞ்சு இப்போதைக்கு சொல்லிக்கிற மாதிரி ஒரு வேலை வாங்கிட்டு வாரேன்ல அந்த நிம்மதி.
மதுரையே குலுங்கி குலுங்கி கூத்தடிச்சிட்டு இருந்தது. அப்புறம் சித்திரைத் திருவிழான்னா சும்மாவா ? மாசி வீதிகள்ல கூடியிருந்த சனக்கூட்டத்துக்கு மத்தில நீந்தி போய்ட்டு இருந்தேன். எப்புடியாச்சும் இந்த மொறை அவ சூடம் சுத்தும் போது சாமிக்கும் அவளுக்கும் நடுவுல நின்னுக்கனும். எல்லா பேரும் சாமிய பாக்க நான் மட்டும் அவள நோக்கன்னு ஒரே ரவுசா இருக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
புள்ளையாரு, முருகனெல்லாம் முன்னாடி போய்ட்டாங்க. மீனாட்சிக்கு தான் எல்லாம் காத்திருந்தாய்ங்க. அங்க அங்க கதற கதற சின்னப்புள்ளைங்கள ஆனைல ஏத்தி விட்டு கொடுமை பண்ணிட்டு இருந்தாய்ங்க. சில வீட்டு பொம்பளைங்க எல்லாம் புருசன் கிட்ட கேக்காதத எல்லாம் பூம்பூம் மாட்டுக்கிட்ட கேட்டுட்டு இருந்துச்சுங்க. அத்தனை ஆரவாரத்துக்கு நடுவுல நான் மட்டும் அவள தேடிட்டு இருந்தேன். இருவதடி தூரத்துல பச்சை தாவணி அவள மாதிரியே இருந்தது. புதுசு போல. நடுவுல ரெண்டு பலூன் கடை, ஒரு சவ்வு மிட்டாய் கடை வேற. நண்டு சிண்டெல்லாம் தாவிக்கிட்டு இருந்தது. நெருங்கி போக கொஞ்சம் செரமமா இருந்தது. சட்டுன்னு பின்னாடி இருந்து ஒரு மொரட்டுக்கை என் தோளப் புடிச்சு நிப்பாட்டுச்சு. ஒருவேளை அவங்கப்பாரு பாத்திருப்பாரோ. ஏற்கனவே அடி வாங்குனது போதாதான்னு கேப்பாரே. பயத்தோட தான் திரும்பிப் பார்த்தேன். அட நம்ம வினோத்.
மொட்டையா வினோத்துன்னு சொல்லக் கூடாது ஏன்னா அந்த பேர்ல எனக்கு ஏகப்பட்ட கூட்டாளிங்க. ஒவ்வொருத்தனுக்கு ஒரு அடைமொழி வச்சுதான் கூப்புடுவோம். வக்கீல் மவன் வினோத், வளையல் கடை வினோத், வித்யாவை கழட்டி விட்ட வினோத், விக்டோரியா டுட்டோரியல் வினோத்.
நந்தி நடுவுல நிக்கும்பாங்க. எனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்திருக்கு. இவன் விக்டோரியா டுட்டோரியல் வினோத். பார்த்து நாலஞ்சு வருசம் இருக்கும். என் செட் தான். அஞ்சு பாடத்துல அவுட்டு. எனக்கு தெரிஞ்ச வரை மூணு வருசம் டுட்டோரியல்ல படிச்சான். பாஸ் ஆனான்னானு கேட்காதீங்க.
"என்னடா மாப்ள பார்த்து எம்புட்டு வருசம் ஆச்சு. மெட்ராஸ்ல இருக்கிறதா யாரோ சொன்னாங்க. எப்பிடிடா இருக்க. கெரங்கி போய்ட்டியேடா. வேலை அதிகமோ ?", கண்ணடிச்சிட்டே ரெண்டு அர்த்தத்துல கேட்டான்.
"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ எப்புடி இருக்க. உங்கப்பா இன்னும் உன்ன கெட்ட வார்த்தைல தான் கூப்புடுறாரா ?"
"அவய்ங்கள விடுடா. ஆளு கொஞ்சம் கலராகிட்டியேடா. ஏ.சி.ல தான் வேலையோ. ஏண்டா கம்ப்யூட்டர் படிச்சா ஒரு லட்சமெல்லாம் சம்பளம் குடுப்பாய்ங்களாம்ல அப்புடியாடா ?"
"அதுக்கெல்லாம் அனுபவம் அதிகம் வேணும்டா", இதுக்குள்ள பேசிட்டே ரொம்ப தூரம் கூட்டிட்டு வந்துட்டான்.
"வண்டிய எங்க நடுரோட்டுல கொண்டாந்து ஓட்டுற ஆளு நடக்குறோம்ல. வுட்டா இதுல ஏரோப்பிளேனே ஓட்டுவீய்ங்களே"
"ஆ அடுத்த திருவிழாக்கு வாங்கிட்டு வந்து ஓட்டுரேன் பிளேனு, இப்ப நீ மொத ஓரத்துல போடா"
"எலேய் சிக்குன சின்னாபின்னமாய்டுவடியேய்"
"டேய் அடங்குடா அவன் போய் அரைமணி நேரம் ஆச்சு", சும்மா போன வண்டிக்காரன சத்தாய்ச்சாச்சு. கொட்டுச்சத்தம், கோலாட்டம், ஒட்டகம், ஒயிலாட்டம் எல்லாம் தாண்டி பல சின்ன சின்ன சந்துகள கடந்து ஒரு டீக்கடைல வந்து உக்கார வச்சிட்டான்.
"அண்ணே ஒரு டீ. உனக்கென்னடா ?"
"எனக்கு பால் தான்டா"
"இன்னும் நீ டீ குடிச்சு பழகலையாடா ? 23 வயசானாலும் இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியேடா. சரி அதவிடு எனக்கும் அப்புடியே உங்க ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கிக் குடுடா. நெறையா குட்டியெல்லாம் குட்டி குட்டி டிரெஸ் போட்டு திரிவாய்ங்களாம்ல. நாங்களும் அப்புடியே உன்ன மாதிரி காதுல எல்லாம் மாட்டிட்டு அலும்பு குடுப்போம்ல"
"எங்க ஆபீஸ்ல அனுபவம் கேட்பாய்ங்கடா. செரமம்"
"போட்டுக்க சும்மா அஞ்சு வருசம்னு. அதான் டுட்டோரியல்ல ஓட்டுனேன்ல"
எனக்கு செம கடுப்பு. ஏற்கனவே என் ஆள பாக்க விடாம கூட்டிட்டு வந்துட்டான். இதுல நாய்க்கு நக்கலு, நையாண்டி வேற.
"சரி சரி மொறைக்காத. பிசினஸ் ஏதாச்சும் பண்ணலாம்னு இருக்கேன். ஐடியா குடு. உனக்கு தான் எல்லாம் தெரியுமே", இப்புடிதாங்க நம்மள உசுப்பேத்தி விட்டு, ஒசாமா பின் லேடன் எங்கன ஒழிஞ்சிருக்கான், கஞ்சா எல்லாம் எப்புடி கடத்துறாய்ங்க, எதுத்த வீட்டு தாத்தா எத்தனை நாளுல செத்துப் போவாருன்னு கேணத்தனமா கேப்பாய்ங்க. நான் என்ன எமனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணியா கேக்க முடியும்.
"எனக்கென்னடா தெரியும். நம்ம முருகன் கிட்ட கேக்கலாம்ல"
"அவன் கிட்ட கேட்டுட்டேன்டா. சரி வா பெங்களூரு போய் யாவாரம் எப்புடி பண்ராய்ங்கன்னு பாத்துட்டு வரலாம்னு கூட்டிட்டு போனான்டா. வீட்டுல 5000 கறந்துட்டு போனோம். ரெண்டு பேரும் சுப்பன் பார்க்கு, லாலு பார்க்கு, அப்புறம் விதான்னு என்னமோ சொன்னாய்ங்க, மேல கொடியெல்லாம் பறந்துச்சு. அங்கெல்லாம் போய்ட்டு சாயந்திரம் ஃப்போரோ, பைவ்வோ ஏதோ ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான். அது பெரிய பலசரக்கு கடையாம். குண்டூசில இருந்து காரு வரை எல்லாம் விப்பாய்ங்களாம். உள்ளாரவே சினிமா கூட பாக்கலாம்னு சொன்னாய்ங்க. வரும்போது பக்கோடால கோழிய பொரிச்சா மாதிரி ஒரு கருமத்த வாங்கி சாப்பிட்டு வந்தோம்"
"கலக்குற போ. உலகம் சுற்றும் வாலிபன் ஆகிட்ட", என்னா சொல்றதுன்னு தெரியாம என்னவோ சொன்னேன்.
"உன்கிட்ட கேட்க வந்ததே வேறடா. அங்கன ஒரு எடத்துல கட்டையெல்லம் அடுக்கி பந்துருட்டி வெளாண்டுக்கிட்டு இருந்தாய்ங்க. முருகன் கூட ஆடுனான். இங்கனயும் அதே போல இருந்தா நானும் ஆடலாம்னு பார்த்தா எங்க இருக்குன்னு தெரியல. யாருகிட்ட கேட்க்குறது. கழுத அது பேரு கூட என்னன்னு தெரியல"
"அது பேரு ஸ்நோ பவுலிங்டா. மதுரைல கெடையாது. இவ்ளோ ஆர்வமா இருக்கேல நீயே ஒண்ணு ஆரம்பிச்சிடு. நீயும் ஆடுனாப்புல இருக்கும். பிசினஸ் பண்ணாப்புலயும் இருக்கும். என்னா ஒரு 50 லட்சம் ஆகும்", பழிக்குப் பழி :)
"பார்த்தியா கடைசி ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி கடைசி என்னையே மாட்டிவிட பாக்குற", அமவுன்ட்ட கேட்டு பய கொஞ்சம் ஆடிப்போயிட்டான்.
"மாப்ள நீ ஒண்ணும் கவலப்படாத. நான் ஐடியா தாரேன். கே.கே.நகர், அண்ணா நகர் பக்கமா ஒரு எடத்தப் பாத்து எல்லாம் செட் பண்ணிரு. அங்கனதான் காச வச்சிக்கிட்டு என்னா பண்றதுன்னு தெரியாம நாய்க்கு பிரியாணி வைக்கிறது, பைவ் ஸ்டார் ஊட்றதுன்னு நெறயா பேரு இருக்காய்ங்க. பிசினஸ் பிக்கப் பண்ணிடலாம்"
"இதெல்லாம் நடக்குற காரியமாடா. நான் பன்னெண்டு படிக்கிறதுக்குள்ளாரவே பன்னெண்டு தடவை டவுசர் கிழிஞ்சிடும் போல. நான் எப்பிடிடா ?"
"அஞ்சாப்பு பெயில் ஆனவனெல்லாம் இன்னிக்கு அஞ்சு அபார்ட்மென்ட் வச்சிருக்கான்டா. நம்பிக்கை தான் வாழ்க்கை. நாலு வார்த்தை மட்டும் நாக்குல சூடு வச்சாப்புல இங்கிலீசுல பேசு போதும். பின்ன தலைக்கெல்லாம் இப்புடி எண்ணெய்யே வைக்க கூடாது. ஆரஞ்சு கலரு, மஞ்ச கலரு, இல்ல ரெண்டும் கலந்துன்னு எதையாவது அடிச்சிக்கனும். முடியெல்லாம் கரண்டுல அடிபட்ட காக்கா கணக்கா நட்டுக்கிட்டு நிக்கணும். இந்தா இப்புடி கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை எல்லாம் போடக் கூடாது. ரவுண்ட் நெக் பனியன் வாங்கி போட்டுக்க. முக்கியமா அதுல 'My Head is COOL, My Dad is FOOL' அப்புடி கிறுக்குத்தனமா என்னமாச்சும் எழுதிருக்கனும். பேண்ட்டுக்கு கார்கோன்னு சொல்லி அங்க அங்க அறுந்து தொங்கும் பாவாடைய நடுவுல புடிச்சு தச்சா மாதிரி ஒண்ணு போட்டுக்க. இப்டிலாம் இருந்தா தான் உன்ன ஸ்நோ பவுலிங் ஓனர்னு நம்புவாய்ங்க"
"பேண்ட், சட்டை எல்லாம் சரி இந்த மூஞ்சி என்னா பண்ணாலும் காட்டிக் குடுத்துருமேடா"
"அதுக்கு ப்ளீச்சிங் பவுடர் போட்டுக்கலாம். ச்சீ ப்ளீச்சிங் பண்ணிக்கலாம். இது மட்டும் பத்தாதுடா. நாலு ப்ளாஸ்டிக் டேபிளு, சேர் எல்லாம் வாங்கிப்போடு. சோடியா வந்து எவ்வளவு நேரம் உக்காந்து என்னா பண்ணாலும் ஒண்ணும் கேக்க கூடாது. பெப்ஸி, கோக் எல்லாம் பத்து ரூவாய்க்கு வெளில வித்தா நீ இருவத்தி அஞ்சு ரூவாய்க்கு விய்க்கணும். அப்போதான் வாங்குவாய்ங்க. பத்தாக்கொறைக்கு பஜார்ல ரெண்டு ஸ்பீக்கர் செட்டு வாங்கி ஒரு மண்ணும் வெளங்காதபடி நாலு பாட்டுங்கள திரும்ப திரும்ப ஓட விடணும். இதெல்லாம் செஞ்சிட்டேன்னு வைய்யி அடுத்த திருவிழாக்கு நீதான் சாமி"
"மாப்ள கேட்கும் போதே சிலிர்க்குதுடா. நீ பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா. நீ சொல்றது மட்டும் நடந்தா கொஞ்ச வருசத்துல ரெண்டு மூணு சங்கத்த கரெக்ட்டு பண்ணி,'இளம் தொழிலதிபர் விருது', 'அடுத்த விடிவெள்ளி', 'தானே வளர்ந்த தானை தளபதி'ன்னு போஸ்டர் எல்லாம் போட்டு அசத்திரலாம்டா. ஒரு கட்சில சேர்ந்து நாலு கட்சி தாவிட்டா எம்.பி ஆகிடலாம். அப்புறம் ஹெல்த் மினிஸ்டர் கேட்டு வாங்கிடலாம்டா"
"மினிஸ்டர் எல்லாம் அப்புறம் ஆகலாம். மொத குடிச்ச டீக்கும், பாலுக்கும் காசக் குடுங்கடா, கடைய அடைக்கணும்", தான் போட்ட டீய விட சூடா கொதிச்சிட்டாரு.
மதுரையே குலுங்கி குலுங்கி கூத்தடிச்சிட்டு இருந்தது. அப்புறம் சித்திரைத் திருவிழான்னா சும்மாவா ? மாசி வீதிகள்ல கூடியிருந்த சனக்கூட்டத்துக்கு மத்தில நீந்தி போய்ட்டு இருந்தேன். எப்புடியாச்சும் இந்த மொறை அவ சூடம் சுத்தும் போது சாமிக்கும் அவளுக்கும் நடுவுல நின்னுக்கனும். எல்லா பேரும் சாமிய பாக்க நான் மட்டும் அவள நோக்கன்னு ஒரே ரவுசா இருக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
புள்ளையாரு, முருகனெல்லாம் முன்னாடி போய்ட்டாங்க. மீனாட்சிக்கு தான் எல்லாம் காத்திருந்தாய்ங்க. அங்க அங்க கதற கதற சின்னப்புள்ளைங்கள ஆனைல ஏத்தி விட்டு கொடுமை பண்ணிட்டு இருந்தாய்ங்க. சில வீட்டு பொம்பளைங்க எல்லாம் புருசன் கிட்ட கேக்காதத எல்லாம் பூம்பூம் மாட்டுக்கிட்ட கேட்டுட்டு இருந்துச்சுங்க. அத்தனை ஆரவாரத்துக்கு நடுவுல நான் மட்டும் அவள தேடிட்டு இருந்தேன். இருவதடி தூரத்துல பச்சை தாவணி அவள மாதிரியே இருந்தது. புதுசு போல. நடுவுல ரெண்டு பலூன் கடை, ஒரு சவ்வு மிட்டாய் கடை வேற. நண்டு சிண்டெல்லாம் தாவிக்கிட்டு இருந்தது. நெருங்கி போக கொஞ்சம் செரமமா இருந்தது. சட்டுன்னு பின்னாடி இருந்து ஒரு மொரட்டுக்கை என் தோளப் புடிச்சு நிப்பாட்டுச்சு. ஒருவேளை அவங்கப்பாரு பாத்திருப்பாரோ. ஏற்கனவே அடி வாங்குனது போதாதான்னு கேப்பாரே. பயத்தோட தான் திரும்பிப் பார்த்தேன். அட நம்ம வினோத்.
மொட்டையா வினோத்துன்னு சொல்லக் கூடாது ஏன்னா அந்த பேர்ல எனக்கு ஏகப்பட்ட கூட்டாளிங்க. ஒவ்வொருத்தனுக்கு ஒரு அடைமொழி வச்சுதான் கூப்புடுவோம். வக்கீல் மவன் வினோத், வளையல் கடை வினோத், வித்யாவை கழட்டி விட்ட வினோத், விக்டோரியா டுட்டோரியல் வினோத்.
நந்தி நடுவுல நிக்கும்பாங்க. எனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்திருக்கு. இவன் விக்டோரியா டுட்டோரியல் வினோத். பார்த்து நாலஞ்சு வருசம் இருக்கும். என் செட் தான். அஞ்சு பாடத்துல அவுட்டு. எனக்கு தெரிஞ்ச வரை மூணு வருசம் டுட்டோரியல்ல படிச்சான். பாஸ் ஆனான்னானு கேட்காதீங்க.
"என்னடா மாப்ள பார்த்து எம்புட்டு வருசம் ஆச்சு. மெட்ராஸ்ல இருக்கிறதா யாரோ சொன்னாங்க. எப்பிடிடா இருக்க. கெரங்கி போய்ட்டியேடா. வேலை அதிகமோ ?", கண்ணடிச்சிட்டே ரெண்டு அர்த்தத்துல கேட்டான்.
"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ எப்புடி இருக்க. உங்கப்பா இன்னும் உன்ன கெட்ட வார்த்தைல தான் கூப்புடுறாரா ?"
"அவய்ங்கள விடுடா. ஆளு கொஞ்சம் கலராகிட்டியேடா. ஏ.சி.ல தான் வேலையோ. ஏண்டா கம்ப்யூட்டர் படிச்சா ஒரு லட்சமெல்லாம் சம்பளம் குடுப்பாய்ங்களாம்ல அப்புடியாடா ?"
"அதுக்கெல்லாம் அனுபவம் அதிகம் வேணும்டா", இதுக்குள்ள பேசிட்டே ரொம்ப தூரம் கூட்டிட்டு வந்துட்டான்.
"வண்டிய எங்க நடுரோட்டுல கொண்டாந்து ஓட்டுற ஆளு நடக்குறோம்ல. வுட்டா இதுல ஏரோப்பிளேனே ஓட்டுவீய்ங்களே"
"ஆ அடுத்த திருவிழாக்கு வாங்கிட்டு வந்து ஓட்டுரேன் பிளேனு, இப்ப நீ மொத ஓரத்துல போடா"
"எலேய் சிக்குன சின்னாபின்னமாய்டுவடியேய்"
"டேய் அடங்குடா அவன் போய் அரைமணி நேரம் ஆச்சு", சும்மா போன வண்டிக்காரன சத்தாய்ச்சாச்சு. கொட்டுச்சத்தம், கோலாட்டம், ஒட்டகம், ஒயிலாட்டம் எல்லாம் தாண்டி பல சின்ன சின்ன சந்துகள கடந்து ஒரு டீக்கடைல வந்து உக்கார வச்சிட்டான்.
"அண்ணே ஒரு டீ. உனக்கென்னடா ?"
"எனக்கு பால் தான்டா"
"இன்னும் நீ டீ குடிச்சு பழகலையாடா ? 23 வயசானாலும் இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியேடா. சரி அதவிடு எனக்கும் அப்புடியே உங்க ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கிக் குடுடா. நெறையா குட்டியெல்லாம் குட்டி குட்டி டிரெஸ் போட்டு திரிவாய்ங்களாம்ல. நாங்களும் அப்புடியே உன்ன மாதிரி காதுல எல்லாம் மாட்டிட்டு அலும்பு குடுப்போம்ல"
"எங்க ஆபீஸ்ல அனுபவம் கேட்பாய்ங்கடா. செரமம்"
"போட்டுக்க சும்மா அஞ்சு வருசம்னு. அதான் டுட்டோரியல்ல ஓட்டுனேன்ல"
எனக்கு செம கடுப்பு. ஏற்கனவே என் ஆள பாக்க விடாம கூட்டிட்டு வந்துட்டான். இதுல நாய்க்கு நக்கலு, நையாண்டி வேற.
"சரி சரி மொறைக்காத. பிசினஸ் ஏதாச்சும் பண்ணலாம்னு இருக்கேன். ஐடியா குடு. உனக்கு தான் எல்லாம் தெரியுமே", இப்புடிதாங்க நம்மள உசுப்பேத்தி விட்டு, ஒசாமா பின் லேடன் எங்கன ஒழிஞ்சிருக்கான், கஞ்சா எல்லாம் எப்புடி கடத்துறாய்ங்க, எதுத்த வீட்டு தாத்தா எத்தனை நாளுல செத்துப் போவாருன்னு கேணத்தனமா கேப்பாய்ங்க. நான் என்ன எமனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணியா கேக்க முடியும்.
"எனக்கென்னடா தெரியும். நம்ம முருகன் கிட்ட கேக்கலாம்ல"
"அவன் கிட்ட கேட்டுட்டேன்டா. சரி வா பெங்களூரு போய் யாவாரம் எப்புடி பண்ராய்ங்கன்னு பாத்துட்டு வரலாம்னு கூட்டிட்டு போனான்டா. வீட்டுல 5000 கறந்துட்டு போனோம். ரெண்டு பேரும் சுப்பன் பார்க்கு, லாலு பார்க்கு, அப்புறம் விதான்னு என்னமோ சொன்னாய்ங்க, மேல கொடியெல்லாம் பறந்துச்சு. அங்கெல்லாம் போய்ட்டு சாயந்திரம் ஃப்போரோ, பைவ்வோ ஏதோ ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான். அது பெரிய பலசரக்கு கடையாம். குண்டூசில இருந்து காரு வரை எல்லாம் விப்பாய்ங்களாம். உள்ளாரவே சினிமா கூட பாக்கலாம்னு சொன்னாய்ங்க. வரும்போது பக்கோடால கோழிய பொரிச்சா மாதிரி ஒரு கருமத்த வாங்கி சாப்பிட்டு வந்தோம்"
"கலக்குற போ. உலகம் சுற்றும் வாலிபன் ஆகிட்ட", என்னா சொல்றதுன்னு தெரியாம என்னவோ சொன்னேன்.
"உன்கிட்ட கேட்க வந்ததே வேறடா. அங்கன ஒரு எடத்துல கட்டையெல்லம் அடுக்கி பந்துருட்டி வெளாண்டுக்கிட்டு இருந்தாய்ங்க. முருகன் கூட ஆடுனான். இங்கனயும் அதே போல இருந்தா நானும் ஆடலாம்னு பார்த்தா எங்க இருக்குன்னு தெரியல. யாருகிட்ட கேட்க்குறது. கழுத அது பேரு கூட என்னன்னு தெரியல"
"அது பேரு ஸ்நோ பவுலிங்டா. மதுரைல கெடையாது. இவ்ளோ ஆர்வமா இருக்கேல நீயே ஒண்ணு ஆரம்பிச்சிடு. நீயும் ஆடுனாப்புல இருக்கும். பிசினஸ் பண்ணாப்புலயும் இருக்கும். என்னா ஒரு 50 லட்சம் ஆகும்", பழிக்குப் பழி :)
"பார்த்தியா கடைசி ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி கடைசி என்னையே மாட்டிவிட பாக்குற", அமவுன்ட்ட கேட்டு பய கொஞ்சம் ஆடிப்போயிட்டான்.
"மாப்ள நீ ஒண்ணும் கவலப்படாத. நான் ஐடியா தாரேன். கே.கே.நகர், அண்ணா நகர் பக்கமா ஒரு எடத்தப் பாத்து எல்லாம் செட் பண்ணிரு. அங்கனதான் காச வச்சிக்கிட்டு என்னா பண்றதுன்னு தெரியாம நாய்க்கு பிரியாணி வைக்கிறது, பைவ் ஸ்டார் ஊட்றதுன்னு நெறயா பேரு இருக்காய்ங்க. பிசினஸ் பிக்கப் பண்ணிடலாம்"
"இதெல்லாம் நடக்குற காரியமாடா. நான் பன்னெண்டு படிக்கிறதுக்குள்ளாரவே பன்னெண்டு தடவை டவுசர் கிழிஞ்சிடும் போல. நான் எப்பிடிடா ?"
"அஞ்சாப்பு பெயில் ஆனவனெல்லாம் இன்னிக்கு அஞ்சு அபார்ட்மென்ட் வச்சிருக்கான்டா. நம்பிக்கை தான் வாழ்க்கை. நாலு வார்த்தை மட்டும் நாக்குல சூடு வச்சாப்புல இங்கிலீசுல பேசு போதும். பின்ன தலைக்கெல்லாம் இப்புடி எண்ணெய்யே வைக்க கூடாது. ஆரஞ்சு கலரு, மஞ்ச கலரு, இல்ல ரெண்டும் கலந்துன்னு எதையாவது அடிச்சிக்கனும். முடியெல்லாம் கரண்டுல அடிபட்ட காக்கா கணக்கா நட்டுக்கிட்டு நிக்கணும். இந்தா இப்புடி கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை எல்லாம் போடக் கூடாது. ரவுண்ட் நெக் பனியன் வாங்கி போட்டுக்க. முக்கியமா அதுல 'My Head is COOL, My Dad is FOOL' அப்புடி கிறுக்குத்தனமா என்னமாச்சும் எழுதிருக்கனும். பேண்ட்டுக்கு கார்கோன்னு சொல்லி அங்க அங்க அறுந்து தொங்கும் பாவாடைய நடுவுல புடிச்சு தச்சா மாதிரி ஒண்ணு போட்டுக்க. இப்டிலாம் இருந்தா தான் உன்ன ஸ்நோ பவுலிங் ஓனர்னு நம்புவாய்ங்க"
"பேண்ட், சட்டை எல்லாம் சரி இந்த மூஞ்சி என்னா பண்ணாலும் காட்டிக் குடுத்துருமேடா"
"அதுக்கு ப்ளீச்சிங் பவுடர் போட்டுக்கலாம். ச்சீ ப்ளீச்சிங் பண்ணிக்கலாம். இது மட்டும் பத்தாதுடா. நாலு ப்ளாஸ்டிக் டேபிளு, சேர் எல்லாம் வாங்கிப்போடு. சோடியா வந்து எவ்வளவு நேரம் உக்காந்து என்னா பண்ணாலும் ஒண்ணும் கேக்க கூடாது. பெப்ஸி, கோக் எல்லாம் பத்து ரூவாய்க்கு வெளில வித்தா நீ இருவத்தி அஞ்சு ரூவாய்க்கு விய்க்கணும். அப்போதான் வாங்குவாய்ங்க. பத்தாக்கொறைக்கு பஜார்ல ரெண்டு ஸ்பீக்கர் செட்டு வாங்கி ஒரு மண்ணும் வெளங்காதபடி நாலு பாட்டுங்கள திரும்ப திரும்ப ஓட விடணும். இதெல்லாம் செஞ்சிட்டேன்னு வைய்யி அடுத்த திருவிழாக்கு நீதான் சாமி"
"மாப்ள கேட்கும் போதே சிலிர்க்குதுடா. நீ பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா. நீ சொல்றது மட்டும் நடந்தா கொஞ்ச வருசத்துல ரெண்டு மூணு சங்கத்த கரெக்ட்டு பண்ணி,'இளம் தொழிலதிபர் விருது', 'அடுத்த விடிவெள்ளி', 'தானே வளர்ந்த தானை தளபதி'ன்னு போஸ்டர் எல்லாம் போட்டு அசத்திரலாம்டா. ஒரு கட்சில சேர்ந்து நாலு கட்சி தாவிட்டா எம்.பி ஆகிடலாம். அப்புறம் ஹெல்த் மினிஸ்டர் கேட்டு வாங்கிடலாம்டா"
"மினிஸ்டர் எல்லாம் அப்புறம் ஆகலாம். மொத குடிச்ச டீக்கும், பாலுக்கும் காசக் குடுங்கடா, கடைய அடைக்கணும்", தான் போட்ட டீய விட சூடா கொதிச்சிட்டாரு.
Subscribe to:
Posts (Atom)



